Wednesday, April 27, 2016

இந்த இந்திய கிராமம் ஏன் ஆசியாவின் சுத்தமான கிராமம்

ந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ள மாவுலி நாங் கிராமத்தில் இயற்கை சூழலுடன் வசிக்கின்றனர் காஷி இன மக்கள்.
கல்வியறிவு உள்ள கிராமமாக இருந்தாலும், இம்மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான்.  வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளின் ஓரம் காணப்படும் மூங்கில் வீடுகள், பார்ப்பவர்களின் கண்களையும், நெஞ்சத்தையும் கொள்ளை கொள்கின்றன.

சாலையின் எந்த ஒரு பகுதியிலும் குப்பைகளை காண முடியாது. காரணம், சாலைகளின் இரு மருங்கிலும் கனிம மற்றும் கரிமக் கழிவுகளை தனித்தனியாக தரம் பிரித்து கொட்டுவதற்காகமூங்கிலால் ஆன குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் சேகரிக்கப்படும் குப்பை உரமாக பயன்படுத்தப்படுகிறது.



கல்வியையும், விவசாயத்தையும் இரு கண்களாய் எண்ணும் இவர்கள், காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு வளம் பெற காடுகள் தேவைஎன்பதை உணர்ந்துள்ள இவர்கள், அதை போற்றி பாதுகாக்கவும் செய்கின்றனர். சிறு வயது முதல் சுத்தம், சுகாதாரம் குறித்து பெற்றோரால் கற்பிக்கப்படுகிறது. அங்குள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்ய யாரும் தயங்குவதில்லை.

தோட்டங்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களை பொதுமக்களே சுத்தம் செய்து பராமரிக்கின்றனர். இந்தப் பணி தினமும் மாலையில் நடக்கிறது. சீரான, சுத்தமான சாலைகள், திட்டமிட்ட கட்டமைப்பு, தடையில்லாமல் கிடைக்கும் சுத்தமான குடிநீர் வசதி போன்றவை, மக்களின் நிம்மதியான சுகாதாரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.பெரியவர்களும், சிறியவர்களும், பொறுப்போடு செயல்படுவதால் மாவுலிநாங் கிராமம் சுத்தமாக காட்சியளிக்கிறது.
மாவுலிநாங் மலைகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள், அரிய வகை மரங்கள் என இயற்கையோடு, சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இக்கிராமம் வளர்ச்சி அடைந்துள்ளது. சுற்றுலா பத்திரிகையான, ‘டிஸ்கவர் இந்தியாமாவுலி நாங் கிராமத்திற்கு, ‘ஆசியாவிலேயே சுத்தமான கிராமம்என்ற விருது வழங்கி கௌவுரவித்தது.
பாரம்பர்யமாக இங்குள்ள மக்கள், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணி பாதுகாத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பற்ற வகையில் சுத்தம், சுகாதாரத்தை பேணுவதை இவர்களின் தலையாய கடமையாகக் கொண்டுள்ளனர்.


மன் கி பாத்என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பிரதமர் மோடி, மாவுலிநாங் கிராமத்தை வெகுவாக பாராட்டினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், மாவுலிநாங் கிராம மக்களைப் போல் செயல்பட்டால், இந்தியா விரைவில் சுத்தமான நாடாக மாறும்எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பாலான நகரங்கள், குப்பையாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் சீர்கெட்டுள்ள நிலையில், மாவுலிநாங் கிராம மக்களை பின்பற்றினால் இன்னும் சிலவருடங்களில் குப்பைகளற்ற சுகாதாரமான மற்றும் சுத்தமான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும். 


- த.ராம்






முதியோர் இல்லம்




தாமு முதியோர் இல்லம், சென்னையில் புறநகர் பகுதியில் இருந்தது. அந்த இல்லத்தைச் சுற்றி மரங்கள், பூச்செடிகள், பறவைகள் என்று அழகாக இருக்கும். அதன் உள்ளே சென்றால் அது சென்னை என்று நமக்கு தோன்றாது. இன்று அந்த இல்லம் இன்னும் அலங்காரமாக இருந்தது, இல்லத்தின் 25-வது ஆண்டு விழா அதாவது வெள்ளி விழா. இல்லத்தில் இருக்கும் அனைவரும், அவர்களின் குடும்பமும் வந்து இருந்தார்கள். அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தாத்தா பாட்டிகள் நடனம், பாட்டு, உடை அலங்காரம் என்று தூள் பண்ணினார்கள். பாட்டிகள் ஆடை அலங்கார அணி வகுப்பில் வெட்கப்பட்டு நடந்து வர, தாத்தாக்களும் பேரன்களும் விசில் அடித்தார்கள்.

நிகழ்ச்சி அருமையாக நடந்து முடிந்தது. இறுதி நிகழ்ச்சியாக கலந்துரையாடல் வைத்தார்கள், அனைவரும் சிற்றுண்டி முடித்து விட்டு பேச வந்தார்கள். முதலில் இல்ல நிர்வாகி ராஜலட்சுமி அம்மாள் பேசினார்.

"அனைவருக்கும் வணக்கம் இந்த இல்லம் கட்டி இன்றுடன் 25 வருடம் ஆகிறது, இது என்னுடைய கணவரின் ஆசை அவர் இப்போது உயிருடன் இல்லை மேலே இருந்து சந்தோஷபடுவார் என்று நம்புகிறேன்" என்று மேலே பார்த்து அழுதாள் 75 வயதான பாட்டி, கண்களை துடைத்துக் கொண்டு " இந்த வெற்றிக்கு இங்கு இருக்கும் இல்லத்தின் உறுப்பினர்கள்தான் காரணம் அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார். முதலில் வந்தது திரு.சேகர்

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் மனைவியும் என்கூடத்தான் இருக்கா. அதனால் இரட்டிப்பு சந்தோஷம். நன்றி" என்றார் சேகர்.

"வணக்கம் என் பேர் சீனு, ரீடையர்டு கஸ்டம் ஆபிஸர் இங்கு எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குது சந்தோஷமா இருக்கேன்.என் மனைவி போய்ட்டா 10 வருஷம் முன்னாடி......... நன்றிகெட்ட என் மகன் வீட்டில் எச்சில் சாதம் சாப்பிட்டுகிட்டு இருந்தேன். மகராசி மருமகளை நான் தேடித்தேடி பிடித்து என் மகனுக்கு கட்டி வச்சேன். அவ தான் என்ன இங்க அனுப்பிச்சிட்டா. என்னடா இப்படி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மகன் இன்றைக்கும் வரலை. அவன் எனக்கு செய்ததுக்கு அவன் பிள்ளை அவனுக்கு பதில் சொல்வான்.... ஆனா நீங்க எல்லோரும் வந்து இருக்கீங்க சந்தோஷம், என் வார்த்தைகள் வழியா உங்க பெத்தவங்களின் ஆசைகளை புரிஞ்சிக்கோங்க" என்று முடித்தார்.

"வணக்கம் என் பெயர் மேரி, என்னுடைய பொண்ணு அமெரிக்காவுல இருக்கா, என்னையும் அங்கே அழைச்சிட்டு போறதா சொல்லினு இருக்கா.......6 வருஷமா (அவரின் குரல் தழுதழுத்தது). மத்தபடி நான் சந்தோஷமா தான் இருக்கேன்"

"வணக்கம் என் பெயர் வாசுதேவ், நான் இங்கயே தான் கடைசிவரை இருப்பேன். நான் யாரையும் நம்பி இல்லை, நான் பார்த்து வளர்த்தவர்களிடம் நான் போய் கையை கட்டி நிக்க முடியாது, என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவன், நான் சந்தோஷமா இருக்கேன், ஆண்டவன் பார்த்துப்பான். நான் யாரையும் நம்பி இல்லை............... என்ன என் பேரக்குழந்தைகளை தான் பார்க்கனும் போல மனசு அடிச்சிக்குது" என்று கண்கலங்கினார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சுந்தரேஸ்வரன் தன் மனைவியை கைத்தாங்கலாக முன் வரிசைக்கு அழைத்து வந்து உக்காரவைத்தார். அவர் இல்லத்தின் மூத்த உறுப்பினர் இருபது வருடங்களாக இந்த இல்லத்தில் இருக்கிறார், வயது 80. அவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

"எல்லோருக்கும் என்னுடைய சார்பாவும் என் மனைவியின் சார்பாவும் வணக்கம், நான் பேசுவதை தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் அறிவுரை கூறப்போவது பிள்ளைகளுக்கு இல்லை உங்களுக்குத்தான். வயதானவர்கள் எல்லோரும் அவரவரின் கெளரவத்தை தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். நீங்கள்  உங்கள் பிள்ளைகள் கெட்டவர்கள் என்று ஏன் உங்களையே இப்படி ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?. நாம் ஜென்மம் எடுத்து ஓடி ஓடி சம்பாதித்தது எல்லாம் அவர்களுக்குத்தானே. அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஏன் இப்படி அவர்களுக்குச் சாபம் கொடுக்கிறீர்கள். அனைவருக்கும் அந்ததந்த வயதில் வரவேண்டிய முதிர்ச்சி வந்துடும். குழந்தையா இருக்கும் பொழுது தாய்பால் தான் உலகம்னு இருந்தோம், அப்புறம் பொம்மைகள், அப்புறம் விளையாட்டு, நண்பர்கள், பெண்கள், மனைவி, குழந்தைகள்ன்னு நம்முடைய ஆசைகள் லட்சியங்கள் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கு. இது என்னமோ உங்க பிள்ளைகள் மட்டும் தான் செய்யறத நினைக்கறீங்க, நாம எல்லோரும் வாலிப வயதில் அப்படித்தான் இருந்தோம். நம் பெற்றவர்களைக் கேட்டால்தான் நம்ம யோக்கியம் தெரியும். உங்கள் கடமை அவ்வளவுதான் முடிந்து விட்டதுனு நினைத்த பின் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இருக்காதீங்க. தனியாக மனைவியுடன் வீடு எடுத்து வந்துடுங்க, இல்லை இந்த மாதிரி இல்லங்களில் வந்து தந்கிடுங்க. உங்களிடம் அதற்க்கான பணம் இல்லையா உங்கள் பிள்ளைகளிடம் வாங்கிக் கொண்டு தங்குங்க. இந்த மாதிரி நான் சொல்வது பிள்ளைகளை நிர்கதியாக விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அவர்களை அவர்களின் வாழ்க்கையை வாழவிடுங்கள், சந்தோஷமோ சோகமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.."

"அப்ப பேரபிள்ளைகளை எல்லாம் பார்க்கறது தப்பு சொல்றீங்களா?" என்றார் ஒருவர்.

"பார்க்கறது தப்புனு சொல்லல, பிள்ளைகள் வீட்டுல் இருந்துகொண்டு அவர்களை பார்த்துக்கறது தப்புன்னுதான் சொல்றேன்"

"அப்படியே விட்டால் தாத்தா பாட்டி என்ற பாசம் இல்லாம போய்டுமே"

"பாசம் என்பது பக்கத்துலே இருந்த தான் வரும்னு இல்லை, பாசத்துக்கு தூரக்கணக்கு எல்லாம் இல்லை. நாம நடந்துகறதுல தான் இருக்கு"

"அப்போ பிள்ளைங்கல கல்யாணம் செய்து கொடுத்தாச்சினா அவ்வளவுதான் நாங்க காசி களம்பனும் சொல்றீங்க"

"காசிக்கு போகச் சொல்லல, உங்க வாழ்க்கையை இன்னொரு ஹனிமூன்ல இருந்து தொடங்கச் சொல்றேன், (கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்) ஆமா வாழ்க்கையை இனிமேல் உங்க மனைவிக்காக மட்டும் செலவு பண்ணுங்க, மனைவி இல்லாதவங்க மேட்ரிமோனியில் பதிவு பண்ணுங்க" (மறுபடியும் கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்). பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நாம் ஏன் அவர்களை சபிக்கவோ இல்லை திட்டிக்கொண்டோ இருக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழவிடுங்கள். நான் இந்த இல்லத்துக்கு வந்த கதையை நீங்கள் கேட்டீங்கனா சிரிப்பு வரும்.(என்று தன் மனைவியை திரும்பி பார்த்தார், அவர் சொல்ல வேண்டாம் என்பது போல சிரித்தபடி கையை ஆட்டினார், இவரும் சிரித்துக் கொண்டு) நாங்கள் என்னுடைய மகன் வீட்டில்தான் தங்கி இருந்தோம். என் மகன் மருமகளுக்கு பட்டு புடவை வாங்கித்தரும் போதெல்லாம் எனக்கு இங்கே ஒவ்வொரு பல்லாக உதிரும், தனக்கும் அதே மாதிரி வேண்டும் என்பாள், வாங்கிக் கொடுத்தால் அதை கட்டமாட்டாள், அது அப்படியே பீரோவில் தூங்கும் . இதே என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு வாங்கி கொடுத்தாள், இவள் அவ்வளவு சந்தோஷமாக இருப்பாள். அதான் பெண்களின் மனது. அப்ப முடிவு எடுத்தேன் இங்க வரவேண்டும் என்று இது உங்களுக்கு சிரிப்பா கூட இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியா பார்த்தீங்கனா, அந்த மனோபாவம் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். இப்போ வாரம் ஆனா என் மகன் குடும்பம் இங்கே இல்லத்துக்கு வந்துடுவாங்க நாங்க எல்லாரும் அவுட்டீங் போவோம், என் மருமகள் எங்களுக்கு பிடிக்குமேனு ஆசை ஆசையா சமச்சி எடுத்துனு வரா. இங்க நாங்களும் சந்தோஷமா இருக்கோம், காரணம் இங்கே இருக்கறவங்க எல்லாம் என்ன மாதிரி வயதானவர்கள், என்னை மாதிரி கூன் விழுந்தவர்கள், கண் பார்வை மங்கியவர்கள், சத்தமாக பேச முடியாதவர்கள், இது என் இனம். எனக்கு பிள்ளை வீட்டில் இருக்கும் போது கஷ்டமாக இருக்கும் எல்லாரும் ஓடி ஆடி வேலை செய்வார்கள் என்னால் அப்படிச் செய்ய முடியாது, அவமானமாக இருக்கும், இந்த மூப்பு மேல் கோபமாக வரும் அதை எல்லோரிடமும் காட்ட ஆரம்பித்தேன்.

ஆனால் இங்கு என்னைப் போலத்தான் எல்லாரும். உண்மை புரிய ஆரம்பித்தது. அதனால் முதியவர்களே உங்களின் இறுதி வாழ்க்கை தன்மானத்துடன் கழிக்க இந்த மாதிரி நல்ல இல்லங்களில் சேருங்கள். பிள்ளைகளே உங்களின் பிற்கால வாழ்க்கைக்கு இப்பவே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், நன்றி " என்று அமர்ந்தார். அனைவரும் எழுந்து நின்று கையை தட்டினார்கள்.

இல்லவிழா நன்றாக முடிந்தது. அந்த இல்லத்தில் ஒரு மாதத்தில் பல பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பலரின் பெற்றோர்கள் இல்லத்தில் வந்து சேர்ந்தார்கள்.

Saturday, April 23, 2016

Exploring divinity



Adhvaitam -
Hinduism has so many things :
1. Aroopam/ Agni too pam. Most of the religions accept God as formless.  I accept but do not have knowledge to explain.
2. Deiva roopam - Siva , perumal etc. unique to Hinduism.  I accept but do not have knowledge to explain.
3. Manushya roopa - similar like soul but it's same God. I accept but do not have knowledge to explain.

I believe in all coexisting. 3rd point eradicates the partiality. Its advaitham.

I believe and if you believe in that, we will never think that no one is superior or inferior.

Good question.
3.
Manu dharma/ caste alone is not Hinduism.
Caste was there , not sure it was introduced by Hinduism or not.
Caste is to find which work you are into. So similar people can marry and work together.

We took it to screw it.

4.
Neeyae anaithum.  Neeyae ooduruvi irukkiraai.

Adhvaitam -
Hinduism has so many things :
1. Aroopam/ Agni too pam. Most of the religions accept God as formless.  I accept but do not have knowledge to explain.
2. Deiva roopam - Siva , perumal etc. unique to Hinduism.  I accept but do not have knowledge to explain.
3. Manushya roopa - similar like soul but it's same God. I accept but do not have knowledge to explain.

I believe in all coexisting. 3rd point eradicates the partiality. Its advaitham.
I believe and if you believe in that, we will never think that no one is superior or inferior.
Good question.
3.
Manu dharma/ caste alone is not Hinduism.
Caste was there , not sure it was introduced by Hinduism or not.
Caste is to find which work you are into. So similar people can marry and work together.

We took it to screw it.
4.
Neeyae anaithum.  Neeyae ooduruvi irukkiraai.
Adhai unarumpodhu
Adhai unarumpodhu amaidhi(peace) adaigirai.
Don't ask me to explain.
Read ramana Maharishi.
5.
I accept formless, deiva roopa and manushya roopa.
Don't ask me where they are and how.
Till Hubble telescope was sent , we did not know there are billions( yes, billions) of galaxies with each has billions of stars.
Till today no single seed (neem seed, for e.g) has been created by science.
All we know is science.

6.

Joke( Guna movie) née neeya irukkiradhunale saavu kidaiyadhu. Naan naana irukkiradhunale saavu kidaiyadhu. :)

Shiva/ ambal/ perumal/ Murugan etc. I believe many.
Neeyum thala. By advaitam.

Kadhai Alla nijam ( movie virumaandi)
Yes boss. That's Hinduism.
Shiva/ ambaal/ perumaal/Murugan/ you / me etc are gods.
Advaitham includes everything like that pond metaphor ( oovamai)

Naanum road ae thaedi kittu irukkaen from the koadu from big Hindu saints. Neengalum thaedunga. From your own  religion or science.
I believe in coexistence with other religions too.
Advaitham, dhvaitham, other religions' gods!

Joke : ippa enna saiveenga. ( movie : guru sishyan)
Take it easy.
Thamarai. It's not imagination, sorry.

Coexistence is the key. Paeriyarum kadavul.
Idhu aeppadi irukku (16 vayadhinilae)

Adhukkum malae po ( movie "I")

Karpanai aendraalum karchilai aendraalum kandhanai naan maravaen.

Coexist is the key.

I believe gods , other religions, dhvaitham, advaitham, you and me as gods / God sources.
10
Neeyae adhu. Mirugamum neeyae. Pagaivanum neeyae. Nanbanum neeyae.
Book , gnana yoga- vivekananda
 Kadavul paadhi. Mirugam paadhi , ondrai saeidhaal kalavai naan. ( movie : aalabandhaan).

Good night!
11

தேவதைக் கதைகள் 1

உங்க பேரக் குழந்தைகளுக்கு சொல்ல தாமரை எழுதும் கதைகள்

ஒரு வானத்தில ஒரு தேவதை இருந்திச்சாம். அந்த தேவதை கொஞ்சம் முட்டாள் தேவதையாம். தேவையில்லாம வில்லங்கத்தை விலைக்கு வாங்கிகிட்டு வருமாம், அப்படித்தான் ஒரு முறை அது ஒரு ஊரு பக்கம் போய்கிட்டு இருக்கும் பொழுது ஒரு பையன் அவங்க அம்மா கிட்ட நான் எங்கியாவது தொலைஞ்சு போறேன் பாருன்னு கோபமா கத்தினானாம்..

பாவம்பா குழந்தைன்னு அந்தத் தேவதை மந்திரம் போட்டு அந்தக் குழந்தையை ரொம்ப தூரம் தள்ளி இருக்கிற இன்னொரு ஊருக்கு போக வச்சிருச்சாம். குழந்தையைக் காணாம அம்மா அழ, அம்மாவைக் காணாம குழந்தை அழ தேவதைக்கு மயக்கமே வந்திருச்சாம்.

விசயத்தைச் தெரிஞ்சிகிட்ட தலைமை தேவதை மூணு பேருக்கு நல்ல முறையில உதவினாத்தான் தேவதை மறுபடி தேவதைகளின் உலகத்திற்கு வரலாம்னு உத்தரவு போட்டிருச்சாம்.

தேவதைக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. யாருக்காவது எதாவது உதவின்னா பரவாயில்லை, நல்ல முறையில் எப்படி உதவறதுன்னே புரியலை. அந்த தேவதை அங்க இருந்த குளத்தோரமா உட்கார்ந்து கிட்டு அழுதுகிட்டு இருந்திச்சாம்.

அப்போ அந்த நாட்டு மந்திரிகுமாரி குளிக்கறதுக்காக அந்தக் குளத்துக்கு வந்தாங்களாம். குளிச்சிட்டு திரும்பறப்போ அழுதுகிட்டே இருந்த தேவதையைப் பார்த்தாங்களாம்.

இவ்ளோ அழகா தேவதை மாதிரி இருக்கியே, உனக்கு என்னம்மா சோகம் அப்படின்னு மந்திரி குமாரி கேட்டாங்களாம். அதுக்கு தேவதை தன் கதையை முழுக்கச் சொன்னதாம்.

மந்திரி குமாரி யோசனை செஞ்சாங்களாம். சரி தேவதை.. நீங்க என்னோட வாங்க. சரியான சந்தர்ப்பங்கள் வரும் போது நான் கேட்கிற உதவிகள் மட்டும் செய்ங்க உங்களுக்கு கண்டிப்பா விமோசனம் கிடைக்க நான் வழி செய்யறேன் என்று அந்த மந்திரி குமாரி தேவதையை தன்னோட மாளிகைக்கு கூட்டிகிட்டுப் போனாங்களாம்..

அந்த நாட்டு ராஜா ரொம்ப நல்லவர் என்றாலும் அவருக்கு குழந்தை கிடையாது. அவருக்கு வாரிசும் இல்லை. இதனால நாட்டோட எதிர்காலமே கேள்விக்குறியா இருந்திச்சு. அமைச்சர் மதிவாணன் அறிவுத்திறமையும் மதியூகமும் இருக்கிறவர். தளபதியோ மிகச் சிறந்த வீரர்.

இரண்டு பேரில் அடுத்து யார் அரசுப் பொறுப்பேற்பது என்பதற்காக நாடே இரண்டா பிரிஞ்சு கிடந்தது.

மந்திரிகுமாரி தேவதைக்கு முழு கதையும் சொன்னாள். சொல்லிட்டு இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடிஞ்சா அது உண்மையிலேயே மிக நல்ல காரியம்னு சொன்னா.

தேவதையும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தது. அதுக்கு என்ன செய்யறதுன்னே புரியலை.

கொஞ்ச நாள் ஆச்சு. இராஜா ஒரு நாள் அரசசபையைக் கூட்டி அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தைச் சொன்னார். சிலர் மந்திரிதான் அடுத்த மன்னராகனும்னு சொல்ல.. சிலர் இல்லை தளபதிதான் சரியானவர்னு சொல்ல அரசவையில் விவாதக்களமா மாற ஆரம்பிச்சது.

அப்பொ இராஜகுரு அங்க வந்தாரு.. அவரு எல்லாரையும் அமைதிப்படுத்தி நீண்ட காலமா வழக்கத்தில் இருக்கிற மாதிரி பட்டத்து யானை தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து அது யார் கழுத்தில் மாலையைப் போடுதோ அவரை மன்னராக்கலாம். கரிகால் சோழன் இப்படித்தான் மன்னரானார் அப்படின்னு சொல்ல எல்லா மக்களும் ஒத்துகிட்டாங்க.

யானை தும்பிக்கையில் மாலையை எடுத்துகிட்டு நகர்வலம் வர ஆரம்பிச்சது. தேவதைக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. யானை யாருக்காவது மாலையைப் போட்டா அப்புறம் அந்த நாடு என்ன ஆகும்னே தெரியாதே..

டக்குன்னு தேவதை ஒரு மந்திரம் போட யானை நேரா மந்திரி மாளிகைக்குப் போச்சு. அங்க இருந்த மந்திரி மகள் கழுத்தில மாலையைப் போட்டது..

தேவதைக்கு அப்பதான் நிம்மதி. உடனே தலைமை தேவதை, தேவதைக்கு முன்னால தோன்றினார்.

தேவதையே நான் மூன்று பேருக்கு மட்டும்தான் உதவச் சொன்னேன். ஆனால் தகுந்த சமயத்தில் நீ செய்த இந்த காரியம் ஒரு நாட்டோட அத்தனை மக்களுக்குமே பயனுள்ளது. தன்னோட அப்பா இராஜாவகணும்னு நினைக்காம நாட்டுக்கு நல்ல அரசன் வேணும்னு சொன்ன மந்திரிக் குமாரியை விட நல்ல தேர்வு இருக்குமா என்ன?

இனி தேவதைகள் உலகிற்கு வர உனக்கு ஒரு தடையுமில்லை.. உன்னோட காரியத்தால ரொம்ப சந்தோசம். உனக்கு என்ன வேணும்னு கேளுன்னு கேட்க..

நான் மறதியால தொலைச்ச அந்த பையனை அவங்க அம்மாவோடச் சேர்த்து வைக்கணும்னு தேவதை கேட்டது.

நல்லவர்களோட சகவாசம் எவ்வளவு உயர்ந்த சிந்தனைகளைக் கொடுக்குது. நீ கேட்டபடியே அந்த பையனை அவன் வீட்டில் நான் சேர்க்கிறேன். அது மட்டுமில்லாமல் உனக்கு இன்னொரு வரமும் தர்ரேன், கேளு அப்படின்னது தலைமை தேவதை..

புத்தி கூர்மை மிகுந்த மந்திரிமகளால் தான் எனக்கு இத்தனை நல்லதுகள் நடந்தது, அதனால் மந்திரிகுமாரியிடம் நான் கல்வி மற்றும் தர்மங்களை கற்க அனுமதிக்கணும்னு தேவதை கேட்டதாம்.

தலைமை தேவதைக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம். என்ன இது என் இனிய முட்டாள் தேவதையா இப்படிப் பேசுவதுன்னு திகைச்சுப் போயிட்டதாம்.

அப்போ இந்த உரையாடல்களை மறைவிலிருந்து கவனிச்சுகிட்டிருந்த இராஜகுரு வெளிய வந்தாராம்.

தலைமை தேவதையை வணங்கி, நாட்டுக்கு நல்லது செஞ்சதுக்கு நன்றி சொல்லிட்டு, உங்க சந்தேகத்தை நான் போக்கறேன் அப்படின்னாராம்.

தேவதைகளின் தலைவியே, தேவதை முட்டாளாய் இருந்தாலும் அது சேர்ந்த இடம் நல்லவர்களின் இருப்பிடமாயிற்றே. மந்திரிகுமாரியுடன் பழகியதால் தேவதைக்கு பொதுநலனே முக்கியம் என்ற குணம் வந்தது. அதனால் அது தனக்காகன்னு ஒண்ணும் கேட்கலை.

நல்லவர்களோட சேரும்பொழுது நமக்கும் நல்ல எண்ணங்கள் வரும். புத்திசாலிகளோட சேரும் பொழுது நமக்கும் புத்திசாலித்தனம் வரும். அது மாதிரி சில நாட்கள் என்றாலும் மந்திரி மகளுடன் சேர்ந்திருந்ததால் தான் தேவதைக்கு இந்த மாற்றங்கள் வந்ததுன்னு சொன்னார்.

அதனால குழந்தைகளே, நாம நம்ம ஃபிரண்ட்ஸா தேர்ந்தெடுக்கறவங்க நல்லவங்களா, அறிவுள்ளவங்களா இருந்தா நாம் உயரலாம்.

மந்திரிகுமாரியின் ஆட்சியில் நாடு செழிக்க ஆரம்பிச்சது. தேவதையும் திருக்குறள், நன்னூல், நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது இப்படிப் பலப்பல நீதி நூல்களை கற்க ஆரம்பிச்சது.

நாடு செழித்ததால் மந்திரிகுமாரியின் புகழ் அக்கம்பக்கத்து நாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பிச்சது. பல நாட்டு மக்கள் இந்த மாதிரி ஒரு அரசு நம்ம நாட்டில நடக்காதா அப்படின்னு ஏங்க ஆரம்பிச்சாங்க,

மகத நாட்டு மன்னன் மகிபாலன் வஞ்சகன். தந்திரக்காரன். அவனுக்கு மந்திரிகுமாரியின் புகழ் பிடிக்கவே இல்லை. எப்படியும் அவர்களின் நாட்டை படையெடுத்து வெல்ல முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. எப்படியாவது மந்திரிகுமாரியை ஒழித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டினான்.

மகத நாட்டில் வனபத்ரகாளியம்மன் பண்டிகை வருடா வருடம் விமரிசையாக நடக்கும். அந்த விழாவிற்கு மந்திரிகுமாரிக்கு அழைப்பு விடுத்தான் மகிபாலன். மந்திரி குமாரியும் அந்த விழாவில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டாள்.

இரண்டு நாள் பண்டிகை முடிந்தது. மூன்றாம் நாள் விழா முடிந்த பின்னால் பூஜை முடிந்து கொடுக்கப்படும் பிரசாதத்தில் வஞ்சகமாக விஷம் கலந்து கொடுத்துவிட்டான்.

பிரசாதம் சாப்பிட்ட உடன் கொஞ்ச நேரத்திலேயே மந்திரிகுமாரி வாந்தி எடுத்து மயக்கமாக ஆரம்பித்தாள்.. மகிபாலன் எக்காளமிடுவதையும் மந்திரி குமாரியின் நிலைமையையும் மாயமாய் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதை உடனே கால தேவதையையும் கற்பனை தேவதையையும் அழைத்தது.

கற்பனை தேவதை நிலைமையை உணர்ந்து கொண்டு கற்பனையில் ஒரு மருத்துவரை படைத்தது. ஒரு பயங்காரமான பிரம்மாண்டமான மிருகத்தை கற்பனையால் படைத்து மகிபாலன் மீதும் மகதநாட்டின் மீதும் ஏவியது..

காலதேவதை காலம் போகும் வேகத்தை குறைக்க, மருத்துவர் கேட்ட மூலிகைகளை எல்லாம் கற்பனை தேவதை கற்பனையிலேயே உண்டாக்கிக் கொடுக்க கற்பனை வைத்தியர் மாற்று மருந்து கொடுத்து விஷத்தை முறித்தார்.

மகத நாடே அல்லோல கல்லோலப் படுவதைக் கண்டு பதறியது தேவதை.. எல்லாவற்றையும் நிறுத்துங்கள் என அறியது.

கற்பனை தேவதை மிருகத்தை நிற்க வைத்தது.. இவர்கள் எல்லாம் மந்திரிகுமாரியைக் கொல்ல முயற்சி செய்த நாட்டுக்காரர்கள் என்றது கால தேவதை..

இல்லை, மந்திரிகுமாரியை கொல்ல முயற்சித்தது மகிபாலந்தான், என்னதான் உயிராபத்து என்றாலும் அப்பாவி மக்களின் உயிரினைப் பலியாக்கக் கூடாது. அது தர்மத்துக்கே கேடு என்றது தேவதை

காலதேவதையும், கற்பனை தேவதையும் நம்ம தேவதையும் உயர்ந்த மனதைக் கண்டு பாராட்டின. மந்திரிகுமார்யும் தேவதையே நீ சகல தர்மங்களிலும் தேர்ந்து விட்டாய் எனப் பாராட்டினாள். மகத மக்களும் மந்திரிகுமாரியின் அடிபணிந்து தங்கள் நாட்டையும் அவளே ஆட்சி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மந்திரிகுமாரியும் ஒப்புக்கொள்ள மகத நாடும் அவர்களிம் நாட்டோடு இணைந்தன. மேலும் சிறிது காலம் தர்மம் பயின்ற தேவதை, அதன் பின்னால் மந்திரிகுமாரிக்கு தகுந்த இளவரசனை திருமணம் செய்வித்து வாழ்த்தி என் உதவி எப்பொழுது தேவையென்றாலும் என்னை நினைத்தால் வருவேன் என வரம் கொடுத்து தன் உலகம் சென்றது..

எல்லா செய்திகளையும் அறிந்த தலைமை தேவதை, நம்ம தேவதையை தலைமை தேவதை பாராட்டியது. தேவதையே தர்மம் என்பது நல்ல அறிவு, பொறுமை, கருணை, நேர்மை என பல நல்ல குணங்கள் சேர்ந்த ஒன்று நீ அனைத்திலும் சிறந்தவளாக விளங்குவதால் உனக்கு தர்ம தேவதையாக பதவி கொடுத்து மகிழ்கிறேன் என்று அறிவித்தது..

மந்திரிகுமாரியும் அவள் கணவனும் மூன்று நாடுகளையும் இணைக்க அது மிகப் பெரிய நாடாகி விட்டது, அக்கம் பக்கத்து நாட்டவரெல்லாம் அவர்களைச் சக்ரவர்த்தியாக ஏற்றுக் கொள்ள, நீண்ட காலம் அவர்கள் நல்லாட்சி செய்து சுகமாய் வாழ்ந்தார்கள்.

முற்றும்.

Thursday, April 21, 2016

'இனி மக்களுக்காக நான், மக்களால் நான்' என்று தயவு செய்து சொல்லாதீர்கள் ஜெயலலிதா அவர்களே..

ங்களுக்கு ஜோஸ் முஜிகாவை தெரியுமா...? நாம் வாழும் அதே புவியில், ஒரு வார்டு உறுப்பினரே சொகுசு கார் புடை சூழ பறக்கும் அதே கண்டத்தில் வாழும் எளிமையான அரசியல்வாதி. உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர். உருகுவே நம் சென்னையிலிருந்து பதினைந்தாயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் சின்ன நாடு.
நாம் வாக்களித்து நம் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு சரியாக ஒரு ஆண்டு முன்புதான் உருகுவே மக்கள் ஜோஸ் முஜிகாவை தம் அதிபராக தேர்ந்தெடுத்தார்கள். தாம் பெற்ற 12,000 டாலர் சம்பளத்தில், ஏறத்தாழ 90 விழுக்காடு பணத்தை வறியவர்களுக்கும், சிறு தொழிற் முனைவோருக்கும் கொடுத்த அற்புத அதிபர் அவர்.
அரசு தனக்களித்த வீட்டில் தங்காமல் இரண்டு அறைகள் கொண்ட சிறு வீட்டில் தங்கி, வார்த்தைகளில் மட்டும் மக்களுக்காக, மக்களோடு வாழாமல் உண்மையாக தம் சக குடிகளுடன் வாழ்ந்த எளிய மனிதர் அவர். தமக்கென எந்த சேவகர்களையும் வைத்துக் கொள்ளாமல், தம் வேலைகளை தாமே செய்த மக்கள் பணியாளர் அவர். 
சரி ஒரு ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். கடல் கடந்து ஏக்கப்பட்டது போதும், நாம் வாழும் நிதர்சனத்தை கொஞ்சம் பார்ப்போம். புரட்சி, அரசியல், அரசியல்வாதி போன்ற சொற்கள் கெட்ட வார்த்தைகளாகி போன அல்லது வன்புணர்வு செய்யப்பட்ட நம் தமிழ்நாட்டின் நிலையை பார்ப்போம். 

நம்மிடமும் ஒரு முதல்வர் இருக்கிறார் அல்லவா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய, எண்ணூறு ஏக்கர் பரப்பளவில் எளிய வாழ்க்கை வாழும் மக்கள் சேவகர். வாக்கு சேகரிக்க கூட விமானத்தில் பறக்கும் மக்கள் பணியாளர். தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களே சந்திக்கும் மக்கள் முதல்வர். மக்களை எப்போதும் வாக்காளராக மட்டுமே பார்த்து பழகிய முதல்வர். அவரை கொஞ்சம் திறனாய்வோம்.  அரசியல், தேர்தல் என்பதையெல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு ஒரு சக குடியாக அல்லது அவரது பார்வையிலேயே ஒரு சக வாக்காளனாக அவரை கொஞ்சம் திறனாய்வோம். 
வெயில் என்றால் வெளிச்சம் மட்டும் அல்ல:

24 மணி நேரமும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே வாழும் நம் மாண்புமிகு முதல்வருக்கு, வெயில் என்றால் வெறும் வெளிச்சம் மட்டும்தான். வெயில், ஒளிமட்டும் தருவதல்ல என்று அவருக்கு சொல்லும் தைரியம் அவர் சகாக்களுக்கு இல்லாத காரணத்தினால், அரசியல் வாழ்க்கைக்கு வந்தபிறகு வெயிலின் வெம்மையை உணராத காரணத்தினால் வெயில் என்றால் வெறும் வெளிச்சம் மட்டும்தான் என்று அவர் பொருள் கொண்டுவிட்டார்.
பிரசார மேடையிலேயே எட்டு ஏர் கூலர் வைத்து தன் சாதனைகளை விளக்கும் அவருக்கு நிச்சயம் வெயில் என்றும் கொடும் வெம்மை, ஆளைக் கொல்லும் வெம்மை என்று எப்போதும் தெரிய வாய்ப்பே இல்லை. இந்த வெம்மையை உணர அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கார் கண்ணாடி கதவைத் திறந்து வைத்தாலோ அல்லது வெயிலில் ஒரு நிமிடம் நின்றாலோ கோடையின் மிக மோசமான  புற ஊதா கதிர்களை உணர்ந்திருக்க முடியும்.

உங்கள் பிரசாரமும், நால்வரின் மரணமும்:
வாட்ஸ் ஆப்பில் ஒரு பிளாக் ஹியூமர் வகையை சேர்ந்த அந்த மீம்ஸ் வேகமாக பரவுகிறது.  “அ.தி.மு.க. பிரசாரத்துல நான்கு பேரு செத்து போயிட்டாங்களே...?” “ஆமாம். அவங்க எல்லாம் முன்னாடியே செத்து இருக்க வேண்டியவங்க அம்மாவுக்காக காத்து இருந்தாங்க...?” - விரக்தியின் விளிம்பில் இருந்து இதை பகிர்கிறான் அனைத்திற்கும் பழக்கப்பட்டு, இதையும் தன் விதி என்று நொந்து போன பாமரத் தமிழன்.
இறந்த நான்கு பேரும், உங்கள் பிரசார யுக்தியின் தோல்வியை மட்டும் சொல்லவில்லை, உங்கள் ஆட்சியின் நிர்வாகத்தின் தோல்வியின் சாட்சிகள் அவர்கள். 'இறந்த நான்கு பேரும், உங்களை நேரில் பார்க்க துடித்து வந்தவர்கள்' என்று உங்கள் சகாக்கள் யாராவது துதிபாடினால் நம்பிவிடாதீர்கள். நீங்கள் அவ்வளவு முட்டாளாக இருக்க மாட்டீர்கள் என்று தீர்க்கமாக நம்புகிறேன். ஆம். உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள் யாரேனும் இன்னும் அதிமுகவில் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள், இந்த கூட்டத்தை கூட்ட அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று.
அனைத்தும் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்ட கூட்டம். ஒரு வெள்ளந்தி மனுஷி, 'எனக்கு இருநூறு ரூபாய் கொடுத்தார்கள்' என்று வாக்குமூலம் அளிக்கும் வீடியோ யூ டியூபில் உலாவுகிறது. அதாவது, வெயிலைகூட பொருட்படுத்தாமல், வெறும் இருநூறு ரூபாய்க்காக எட்டு மணி நேரம் காத்திருக்க ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது என்றால் அவர்கள் எவ்வளவு பொருளாதார அழுத்தத்தில் இருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
தன் பிள்ளைக்கு பால் பவுடர் வாங்க, மின்சார கட்டணம் கட்ட, பணம் சேமிக்க, ஏன் அடுத்த வேளை உணவிற்காக அந்த பணம் பயன்படலாம் என்று கூட அந்த மக்கள் வந்திருப்பார்கள்.  இல்லை, பணம் வாங்கியவுடன் ஆண்கள் எல்லாம் மதுபானக்கடைகளுக்குதான் சென்றார்கள் என்றால், இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்கப் போகிறது.

இது பெருஞ் சோகம் இல்லையா...? இதற்கு என்ன சப்பைக்கட்டு கட்டப் போகிறீர்கள். நீங்கள் சிறை சென்ற காலக்கட்டத்தில் இறந்த முன்னூற்று சொச்சம் பேரும், நீங்கள் சிறை சென்ற அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று சொல்லியது போல், நீங்கள் இதற்கு என்ன காரணம் சொல்ல போகிறீர்கள்? உங்களை பார்த்த ஆனந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டார்கள் என்று காரணம் கற்பிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 
ஒரு ஊடகவியலனாக,  உங்கள் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு வந்திருக்கிறேன். மாலை 4 மணிக்கு கூட்டமென்றால், மக்கள் 10 மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும். ஆறு மணி நேரம் மக்கள் படும் பாடு என்ன என்று சக வாக்காளனாக நீங்கள் என்றாவது உணர்ந்து இருக்கிறீர்களா? 

இங்கு சொல் என்பது வெறும் வார்த்தைகளால் கட்டப்பட்டது மட்டுமல்ல, அதற்கு ஒரு அதிர்வும், ஆற்றலும் இருக்கிறது. 'அம்மா' என்ற சொல் பேராற்றல் உடையது. நீங்கள், உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும், அந்த ஆற்றலை உணர்ந்தவராயின், நீங்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் ? எந்த தாயும் தனது பிள்ளைகள் சுட்டுப்பொசுக்கும் வெயிலில் கருகிச் சாவதை விரும்பமாட்டாள்.
உங்கள் மகன்கள் செத்ததற்கும், உங்கள் மகள்கள் வெயிலில் வதைப்படுவதற்கும் நீங்கள் சொல்லும் சமாதானம்தான் என்ன? நான்கு வாக்கு போய் விட்டது என்றளவில்தான் உங்கள் வருத்தமா  இல்லை உங்களுக்காக வாக்களிப்பதும், உங்களுக்காக சாவதும் தான் தமிழ் பிரஜைகளின் தலையாய கடமை என்று நினைத்துவிட்டீர்களா ? 'போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்' என்பது போல் வெயிலென்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் என்கிறீர்களா ?
வெயிலில் காய்வதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறுவது நல்லதுதான். வெயிலில் நீர் போகலாம், உயிர் போகலாமா ? மிகை மழையிலும், அதி வெயிலிலும் மக்கள்படும் துன்பம் ஏன் இத்தனை ஆண்டு காலமாக உங்களுக்கு புரியவே மாட்டேன் என்கிறது. 

இது தேர்தல் காலமாக இல்லமல் இருக்குமாயின், நிச்சயம் நீங்கள் சென்னையில் இருந்திருக்கமாடீர்கள். குளிரூட்டப்பட்ட அறையில் படறும் சிறு வெப்பத்தைக் கூட தாங்கி கொள்ள முடியாமல், கொடநாடு போகும் நீங்கள், உங்கள் குடிகளின் கஷ்டத்தை உணர்வது எப்போது ? மாயத்திரையை விலக்கிவிட்டு தமிழகத்தை பார்ப்பது எப்போது ?

உங்களை நீங்களே தகுதி இறக்கம் செய்து கொள்ளாதீர்கள்:
நீங்கள் ஆங்கிலத்தில் மிகப் புலமை வாய்ந்தவர், அதனால் உங்களுக்கு தெரிந்த மொழியிலேயே சொல்கிறேன், For every action, there is an equal and opposite reaction". நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ மோசமான வினைகளை அறுவடை செய்ய விதைகளை தூவிக் கொண்டே செல்கிறீர்கள். சூரியன், சின்னத்தில் மட்டும் அல்ல, நிஜத்திலும் உங்களுக்கு மோசமான எதிரி ஆகிவருகிறது. கொடும் வெயிலில் பிரசாரத்தை வைப்பது மக்களுக்கு செய்யும் அநீதி. அதை பற்றி எனக்கு கவலையில்லை என்று உங்களை நீங்களே தகுதி இறக்கம் செய்து கொள்ளாதீர்கள்.   
வெயிலின் வெப்பத்தை கணிக்க பெரும் சிரமப்படவேண்டியதில்லை. வானிலை ஆய்வு மையம் உங்களுக்கு அனைத்து தரவுகளையும் தந்திருக்கும், அப்படி இல்லை என்றால் அதற்கான பல ஆப்கள் இருக்கிறது.  ஆராய்ந்து பார்த்ததில் நாளை  மறுநாள் நீங்கள் பிரசாரம் செய்ய இருக்கும் திருச்சியில், இந்த வாரத்திலேயெ அதிக வெப்பம் இருக்கப் போகிறது (41 டிகிரி).
இதில் நம்பிக்கை இல்லையென்றால் வானிலை ஆய்வு மையத்தை விசாரித்து பாருங்கள். நீங்கள் உங்கள் குடிகளுக்கு அல்லது உங்களை தாயாக மதிக்கும் தொண்டர்களுக்கு செய்யும் பேருதவி, உங்கள் பிரசாரத்தை தள்ளி வைப்பது அல்லது நேரம் மாற்றுவது.
உங்களை ஜோஸ் முஜிகாவை போல் வாழ சொல்லவில்லை. சொகுசான பங்களாவில் வாழ்வதை யாரும் குறை சொல்லவில்லை. பணியாளர்களை வைத்துக் கொள்வதை பழிக்கவில்லை. சாமான்ய தொண்டனின் சிறு விருப்பமாக இருப்பது, அவனின் கஷ்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான். 

இதை செய்தால் மட்டுமே, நீங்கள் கூறும் “மக்களால் நான்; மக்களுக்காக நான்' என்ற வாக்கியம் முழுமை பெறும். இப்போது  மக்களின் முறை, உங்கள் தொண்டர்களின் முறை. அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள்.செய்வீர்களா... நீங்கள்  செய்வீர்களா...?








Wednesday, April 20, 2016

தர்மதேவதையும் அதர்ம தேவதையும்

ஒரு சின்னக் கதை.. எழுதியவர் தாமரைச்செல்வன்.... 
 
 
தர்ம தேவதைக்கும் அதர்ம தேவதைக்கும் எப்பொழுதுமே போட்டிதான்.
யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் தர்மதேவதைக்குப் பலம் கூடும். யாராவது தீய காரியம் செய்தால் அதர்ம தேவதைக்குப் பலம் கூடும்.
 
தர்ம தேவதை பல தூதர்களாக அவதாரங்களாக வடிவெடுத்து மக்கள் மத்தியிலே வந்து தர்மத்தைப் பிரச்சாரம் செய்தது. அதர்ம தேவதை அதிர்ஷ்டம், பொறாமை போன்ற வடிவங்களெடுத்து அதர்மத்தை தூண்டியது.
 
தர்மதேவதையின் கை அவ்வப்போது உயர்ந்தாலும் அதர்மம் மீண்டும் மீண்டும் பலம் பெற்றது. எனவே அதர்மத்தை தோற்கடிக்க தர்மம் யோசித்தது.
 
தர்மதேவதை இறைவனிடம், யாராவது தவறு செய்துவிட்டு, அதை உணர்ந்து வருந்தினால் அந்தப் பாவத்தை நீங்கள் மன்னித்து விடுகிறீர்கள் அல்லவா? அப்படியானால் அதர்மம் அந்த வலிமையை இழந்துவிட வேண்டும் என வேண்டியது.
 
அதர்மமும் தன் பங்குக்கு ஒரு நிபந்தனை போட்டது. யாராவது ஒரு நல்ல காரியம் செய்துவிட்டு அதைத் தான் செய்ததாக எண்ணிப் பெருமைப் படுவாரானால் அது அதர்மத்தின் கணக்கில் சேரவேண்டும் எனக் கேட்டது.
 
கடவுள் இருவருக்குமே பொதுவாகத் தலையசைத்தார். அதர்மம் இப்பொழுது தன்னுடைய மிகப்பெரிய ஆயுதமான புகழ்ச்சியைக் கையில் எடுத்தது.
 
தர்மம் என்னதான் பிரச்சாரம் செய்து நல்லதைச் செய்ய வைத்தாலும் அவர்களைப் புகழ்ந்தே ஆணவம் கொள்ளவைத்து தர்மத்தின் பலத்தை நாசமாக்கியது அதர்மம். நான் செய்தேன் என்ற போதை தலைக்கேற ஆணவம் பிடித்த அத்தனை தர்மவான்களும் அவர்களை அறியாமலேயே அதர்மத்தின் பலத்தை அதிகரித்துக் கொண்டே போனார்கள். தர்மத்திற்கு எதைச் சொல்லி தர்மத்தை நிலைநாட்டுவது எனப் புரியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டது..
 
தர்மத்தின் தோல்வி தொடங்கியது எப்பொழுது தெரியுமா? எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற ஆசை எப்பொழுது தர்மத்தின் மனதில் தோன்றியதோ அப்பொழுதே தர்மம் தோற்றுப் போய் விட்டது. இப்படித்தான் முதலில் தோன்றும்.
 
ஆனால் முதன்முதலில் போட்டிக்கு ஒப்புக் கொண்ட பொழுதே தர்மம் தோற்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் படுதோல்விக்குக் காரணமாகிப் போனது. அவ்வளவுதான்.
 
இறைவன் என்னைப் படைத்ததிற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால் அதர்மத்தையும் ஒரு காரணத்துடன் தான் படைத்திருக்கிறார் என்ற தெளிவு தர்மத்திற்கு இருந்திருக்குமாயின் தர்மம் போட்டியிடமால் தன் காரியத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்திருக்கும்.
 
இன்று போட்டியிடும் அத்தனை மதங்களும் தர்மத்தின் நிலையில்தான் இருக்கின்றன. இந்த மதம் இவ்வளவுதான் என்று மதங்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிட்டு, அதை மற்றவர் மீது திணிக்க முயற்சிப்பதால் நல்ல கருத்துக்கள் கொண்ட மதங்கள் கூட கெட்ட மதங்களாக மாறிவிடுகின்றன.
 
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.. ஒவ்வொரு உயிருக்கும் இறைவனுக்கும் இடைப்பட்ட தூரம், உறவு, உரிமை எல்லாம் சமம்தான். ஆளுக்கு ஒரு பக்கமிருந்து இறைவனை அணுகுகிறோம். ஒவ்வொரு பாதைக்கும் வித்தியாசமிருக்கும்..
மதங்கள் இறை நம்பிக்கையின் அடிப்படையில் உற்பத்தி ஆனவை. இறைவனை மேலும் மேலும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தொடர வேண்டிய பயணம். இறைவனை மற்றவரிடம் கொண்டு சேர்க்கிறேன் என எதிர் திசையில் திரும்பியதன் விளைவு தன் மதம் பற்றிய பெருமை. அப்பெருமை கர்வமாகி, கர்வம் ஆணவமாகியது.
 
கர்வத்தை எந்த மதமுமே அங்கீகரிக்கவில்லை. அந்த மதத்தையே இன்று கர்வமாக மாற்றிவிட்டதுதான் பூசல்களின் அடிப்படை. இதனால் நல்லது செய்கிறோம் என்ற எண்ணத்தில் கெடுதல்களை பெருமிதத்துடன் செய்து கொண்டிருக்கிறோம்.

மத்திய இந்தியாவில் தகிக்கும் பிரச்னை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா...?

நீங்கள் அரசுடன் தொடர்ந்து முரண்படும்போது, உங்களை கைது செய்வதற்கு அதிக காரணம் தேவைப்படுவதில்லை. ஏன் காரணமே கூட தேவையில்லை. ஏதாவது ஒரு வழக்கு உங்கள் மீது புனையப்படும். அதுவும் நீங்கள் பொது சமூகத்திற்கு அதிகம் தெரியாத பழங்குடியாக இருந்தால், எந்த வழக்கும்  இல்லாமல் உங்களை சிறையில் வைக்க முடியும், ஏன் ஒரு நாள் காயம்பட்ட உங்கள் சவம் சாலையோரத்தில் கண்டு எடுக்கவும்படலாம். இது நாள் வரை பழங்குடிகளுக்கு எதிராக நீண்ட அரசுகளின் தாக்குதல், இப்போது அவர்களுக்காக பேசும், எழுதும் ஊடகவியலாளர்கள் மீதும் நீண்டிருக்கிறது. பழங்குடிகளுக்கு சார்பாக எழுதினால்,  மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யும் போக்கு மத்திய இந்தியாவில் குறிப்பாக சத்தீஸ்கரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை அம்னிஸ்டி இண்டர்நேஷனலின்  ( Amnesty International) விசாரணை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை?
 ஊடகவியலாளர் மாலினி சுப்பிரமணியன், scroll.in இணையதளத்தில் பணிபுரிகிறார். அரசு மற்றும் பாதுகாப்பு படையினரால், ஆதிவாசிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையை தொடர்ந்து எழுதுகிறார். சத்தீஸ்கரின் அரசால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறலை பொது சமூகத்திடம் கொண்டு சேர்க்கிறார். 'சமஜீக் எக்தா மன்ச்' என்னும் இயக்கத்தை சேர்ந்தவர், அவரை மிரட்டுகிறார்கள். எழுதுவதை உடனே நிறுத்தும்படி சொல்கிறார்கள். நிறுத்தவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள். ஆனால், மாலினி நிறுத்தவில்லை. அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து எழுதுகிறார். 

ஒரு நாள் இரவு கல் எரிந்து அவர் வீட்டு கண்ணாடி மற்றும் கார் கண்ணாடி நொறுக்கப்படுகிறது.  இது தொடர்பாக, அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதலில் வழக்கு பதிய மறுத்த காவல் துறை, சில நாட்களுக்கு பின், “அடையாளம் தெரியாத நபர்கள் ஐம்பது ரூபாய் சேதம் விளைவித்துவிட்டார்கள் “ என்று வழக்கு பதிகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையளர் மூலமாக, அவரை மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல வைக்க அழுத்தம் தருகிறது. அவரது பாதுகாப்பு கருதி scroll.in இணையதளமும் அவரை வெளியேற சொல்கிறது. கனத்த இதயத்துடன் வெளியேறுகிறார். 

"இது தனி மனிதன் மீதான தாக்குதல் இல்லை, கள நிலவரத்தை, அரசுக்கு பிடிக்காத உண்மையை எழுதும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்” என்கிறார் மாலினி.
இவர் நிலையாவது பரவாயில்லை என்பது போல் உள்ளது சந்தோஷ் யாதவ் மீதான தாகுதல். சந்தோஷ், அவர் பள்ளி காலத்தில் காவல் துறை அதிகாரியாக விரும்பியவர். ஆனால், காலம் அவரை பத்திரிக்கையாளராக மாற்றியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்ரிமாஹு என்னும் கிராமத்தில் ஐந்து ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் என்று பாதுகாப்பு படை கைது செய்கிறது. பத்ரிமாஹூ கிராமத்தினர்,  கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்கள் இல்லை என்கிறார்கள். சந்தோஷ் கைது செய்யப்பட்டவர்களுக்காக எழுதுகிறார். அது மட்டுமல்லாமல்,  அவர்களுக்காக சட்ட உதவியையும் செய்கிறார். தொடர்ந்து, ஆதிவாசிகளுக்கு எதிரான அரசின் அடக்குமுறையை எழுதுகிறார். சில நாட்களில் சந்தோஷ் கைது செய்யப்படுகிறார். மோசமான வழக்குகள் புனையப்படுகிறது. இப்போது அவர் மனைவி பூனம் யாதவ், நீதிமன்றத்திற்கும் சிறைசாலைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். 

இது தொடர்பாக, சந்தோஷின் வழக்கறிஞர் இஷா கந்தல்வால், “ஆதிவாசிகளுக்கு ஆதரவாக ஒருவர் எழுதும் போது, அவர் தாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. சந்தோஷ் 2013 ம் ஆண்டு முதல் அரசின் அடக்குமுறையை சந்தித்து வருகிறார். ஒருமுறை அவரை அம்மணமாக வைத்தும் காவல்துறை அடித்துள்ளது” என்கிறார். 
உண்மை தினமும் மரணிக்கிறது :
'ஏசு ஒரு  முறைதான் உயிர்த்தெழுந்தார்; ஆனால் ஏரோது மன்னன் தினம் தினம் உயிர்த்தெழுகிறான்' என்பதாக ஒரு கவிதை இருக்கிறது. அது போல்தான் அதிக வளங்கள் இருக்கும் மத்திய இந்தியாவில் நிலையும். சோமாரு நாக், ஒரு ஆதிவாசி பத்திரிக்கையாளர். ஆதிவாசி ஒருவர் பத்திரிக்கையாளர் ஆவது எனபது அரிதினும் அரிதாக நடப்பது. 'பத்திரிக்கா' என்னும் தினசரியில், கிராமப்புற விஷயங்களை தொடர்ந்து எழுதுகிறார், கூடவே ஆதிவாசிகள் மீது போடப்படும் பொய்யான வழக்குகள் குறித்தும். இந்த காரணம் அவரை கைது செய்ய பாதுகாப்பு படைக்கு போதுமானதாக இருந்தது. கிராம பஞ்சாயத்து அவருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுகிறது. அவர் அப்பாவி என்றது. ஆனால் எதுவும் செவிடாகி போன அரசுக்கு கேட்கவில்லை. 

பத்திரிக்கையாளர்  ராஜ்குமார் சோனி, “நீங்கள் பாஸ்தரில் பத்திரிக்கையாளராக இருந்தால், கண்டிப்பாக வாழ்வில் ஒரு முறையேனும் மாவோயிஸ்ட்களிடம் பேச நேரிடும், அவர்களை பேட்டி காண நேரிடும். இது மும்பையில் உள்ள பத்திரிக்கையாளர், தொழிலதிபரை பேட்டி காண்பது போல் இயல்பானது. நாங்கள் இரு பக்கத்தின் நியாயத்தையும் எழுதுகிறோம். நாட்டில் ஏதேனும் சட்டம் இருக்கிறதா, நாங்கள் ஒரு சார்பாக தான் எழுத வேண்டும் என்று ?” என்கிறார். 

ஆனால், அரசு இதைதான் விரும்புகிறது. நீங்கள் ஒரு சார்பாக இருக்க வேண்டும் என்கிறது. நீங்கள் தவறும் போது, உங்கள் மீது வன்முறையை ஏவுகிறது.

'பத்திரிக்கா' தினசரியின் ஆசிரியர் ஜினேஷ் ஜெயின்,  “பாஸ்தர் மாவட்டத்தில் உண்மை தினமும் செத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒன்று அரசும் காவல்துறையும் சொல்வதை எழுத வேண்டும் அல்லது அவர்களுக்கு பிடித்ததை எழுத வேண்டும். இல்லையென்றால், நீங்கள் அடக்குமுறைக்கு எப்போது வேண்டுமானாலும் உள்ளாவீர்கள்” என்கிறார்.

இது பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஆதிவாசிகள் சார்பாக யார் பேசினாலும் அவர்களை மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவர்களை அரசு கைது செய்கிறது. அண்மையில் நடந்த சோனி சோரி மீதான தாக்குதல், மருத்துவர் பிநாயக் செனின் கைது என ஆதிவாசிகளின் பிரச்னையை யார் பொது சமூகத்திடம் கொண்டு சென்றாலும், அவர்களை கைது செய்வதும், குண்டர்களை விட்டு அவர்களை தாக்குவதும் தொடர்ந்து நடத்து வருகிறது.
குறிப்பாக சத்தீஸ்கரில், 6, 070 பேர் கொள்ளவு கொண்ட சிறைகளில் மொத்தம் 15, 840 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசிகள்.

அம்னிஸ்டி இண்டர்நேஷனல்,  முக்கியமாக இரண்டு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுக்கு  முன்வைக்கிறது. 'புனையப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள், செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள். மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்துங்கள்.' 
நாம் ஏன் மத்திய இந்தியாவின் பிரச்னையை தெரிந்து கொள்ள வேண்டும் ?:
இது எங்கோ நடக்கும் பிரச்னைதானே என்று நாம் ஒதுங்கி செல்லல் ஆகாது. ஆம். இங்கு கைது செய்யப்பட்ட ஆதிவாசிகள் அனைவரும் இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராக இருந்தவர்கள். நாம் எக்காலமும் ஆயுத போராட்டத்தையோ அல்லது மாவோயிஸ்ட்களையோ ஆதரிக்க முடியாது. ஆயுத பாதை என்பது அழிவின் பாதை. ஆனால், அதே நேரம் அப்பாவி ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி கைது செய்வது என்பது மிக மோசமான உதாரணம். இது அந்த அப்பாவி மக்கள்,  அரசின் மீது நம்பிக்கை இழக்கவே வழி வகை செய்யும். மிக மோசமான சூழலை ஏற்படுத்தும். அரசு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும், அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டும். இதை செய்யாமல், மேலும் மேலும் அவர்களை சுரண்டுவது, அந்த மக்களை அந்நியப்படுத்தும் செயல். 

சரி,  இதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இதை நாம் தமிழக சூழலுக்கு பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும். கூடங்குளத்தில் என்ன நிகழ்ந்தது. அந்த மக்களின் நியாயமான அச்சத்தை போக்க இந்த அரசு என்ன செய்தது ? வெறும் வன்முறையை மட்டும்தானே பதிலாக தந்தது. 

இதையெல்லாம் தாண்டி, மக்கள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று அரசு நினைக்கிறது. அந்தந்த பகுதி மக்களின் போராட்டத்தை, அந்த பகுதியில் சுருக்கிவிட வேண்டும் என்று அனைத்து அரசுகளும் விரும்புகிறது. 2010 -ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மத்திய இந்தியாவில் ஆதிவாசிகள் மீது ஏவப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக  சேலத்தின் பியூஷ்,  சேலத்திலிருந்து - சிவகங்கை வரை சைக்கிள் பயணம் போக திட்டமிடுகிறார். இதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு போட்டது அரசு. 2008 ம் ஆண்டு நந்திகிராம் மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்கிறார். அதற்காக அவர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது. 

பியூஷ் சொல்கிறார், “நாங்கள் உள்ளூர் பிரச்னைகளுக்காக பல வீரியமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால், அப்போதெல்லாம் அரசு எங்கள் மீது வழக்குப்போட்டதில்லை. ஆனால், இன்னொரு மாநிலத்தில் பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைக்காக நாங்கள் குரல் கொடுக்கும்போது, எங்கள் மீது மிக மோசமான வன்முறையை ஏவுகிறது. அதாவது, மக்கள் அனைவரும் ஒன்றுப்பட்டுவிடாமல் இருப்பதில் அரசுகள் மிகத்தெளிவாக இருக்கிறது”

ஆம். மக்கள் எப்போதும் ஒன்று சேருவதை அரசுகள் விரும்புவதில்லை. நாளை நமக்கொரு பிரச்னை வரும் போது, நம் நிலங்கள் நிறுவனங்களால் களவாடப்படும் போது, அது நம் பிரச்னையாக சுருங்கிவிடாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் அண்டை மாநிலத்தின் பிரச்னையையும் தெரிந்து கொள்ள வெண்டும். 

- மு. நியாஸ் அகமது