Monday, April 11, 2016

மாணவி பிரேமிசா கல்வி உதவித் தொகை!

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

                                      மகாகவி பாரதியார்.


மாணவி பிரேமிசா சார்பில் ஒரு நல்லன்பர் நம் குழுவைத் தொடர்பு கொண்டார்.

மாணவி பிரேமிசா இலங்கையை தாயகமாகக் கொண்டவர். மதுரையில் தந்தை தாயுடன் வசித்த அவர் கோவை யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்து வந்தார். மிக நன்றாக படிக்கும் மாணவி இவர் என பொறியியல் கல்லூரி நிர்வாகமே சொல்கிறது.


திடீரென அவரின் தந்தை காணாமல் போய்விட்டார், அவருக்கு என்ன நேர்ந்தது என யாருக்கும் தெரியவில்லை.  அவரால் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பிற்கு கட்டணம் செலுத்த இயலவில்லை.  நல்மனம் கொண்ட மக்களால் சற்று உதவி கிட்டினாலும்  துயரில் தத்தளித்தார். MCE89 குழு சார்பில் அவரின் துயரை முழுமையாக துடைக்க நண்பர்கள் முடிவெடுத்தனர்.


அதாவது   அவர்  மீண்டும்  உதவி  தேடி அலைய வேண்டிய அவசியம்  இன்றி வரும் கல்வியாண்டு (final year ) கட்டணத்தையும் சேர்ந்துச் செலுத்த முடிவு செய்தோம். அதற்காக  அவரது கல்வி கட்டணத்தில்  தள்ளுபடி செய்யக்  கேட்பது  என  முடிவு செய்து  கல்லூரித்  தாளாளரைச் சந்திக்க  அவரது கல்லூரிக்கு  நண்பர்கள் சென்று அங்கு கல்லூரி  உரிமையாளரை சந்தித்து  கல்விச் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்  தனது  பங்குதாரர்களை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறினார்.  அதன்படி கல்லூரி உரிமையாளர் மனம் இளகிக் கட்டணத்தைப் பெருமளவு குறைத்தார்.

அந்த மாணவி கட்டவேண்டிய பாக்கித்தொகை ரூ 244250ல் 64250 வரை குறைத்து ரூபாய் 180000 கட்ட சொன்னார்.  மீண்டும் அழுத்தம் கொடுத்ததின்   பயனாக மனமுவந்து ரூ 104250 குறைத்து பாக்கித்தொகை ரூ 140000 மட்டும் கட்ட ஒப்புதல் அளித்தார்


இந்த  முடிவான தொகை யில்  இதுவரை நமது கல்லூரி  நண்பர்கள் மூலம் ரூ 100000 வசூலித்தோம். நண்பர் ராசப்பாவின் நண்பர்கள் உறவினர் மூலம் மிச்சப் பணம் கிட்டியது..

இந்த தொகை  கல்லூரியிக் கட்டப்பட்டது.  பின்னர்  ஒருநாள்  சென்று  கல்லூரி  தாளாளருக்கு அவரது கருணை  உள்ளத்தை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த மாணவி நண்பர்களைத்தொடர்பு கொண்டு தழுதழுத்த குரலில்  நன்றி கூறினார். Mce 89 நண்பர்களுக்கு நன்றிக்  கடிதம் எழுதினார்..

கல்லூரி  தாளாளரும்  பணம்  கிடைத்ததற்கு நன்றி  தெரிவித்தார். ஒரு  சகோதரியின் வாழ்வில்  ஒளியேற்றி அவர்  கண்ணீரை துடைத்தோம். வாழ்த்துக்கள் தோழர்களே.பணி  தொடரட்டும்.


கைகொடுத்த நண்பர்கள்
  1. A.  தியாகராஜன்
  2. S. தளபதி ஸ்ரீனிவாசன்
  3. P. ராஜப்பா
  4. A. ராமச்சந்திரன்
  5. G. முருகானந்தம்
  6. S. பாஸ்கர்
  7. N. செந்தில்குமார்
  8. J. கண்ணன்
  9. S.R. ரமேஷ்
  10. சிரில் ஆனந்த்
  11. J. ரமேஷ்
  12. S. அற்புதசாமி
  13. M. மணவாளன்
  14. S. தாமரை செல்வன்
  15. R. பெரியசாமி
  16. K. திருநடன சிகாமணி
  17. M. மெஹபூப் பாஷா
  18. D. பார்த்தசாரதி
  19. C. முத்துக்குமார்
  20. ஷா ஆலம்
  21. B. சசிகுமார்
  22. N. கோபிநாத்
  23. R.N. உமாசங்கர்
  24. P. மணிவண்ணன்
  25. R. செந்தில்குமார்
  26. S. ராஜசேகர்
  27. V, முரளிபாஸ்கர்
  28. P. ராஜப்பாவின் நண்பர்கள்.





No comments:

Post a Comment