Saturday, April 9, 2016

கூறு கெட்ட குக்கரு!!!!

ஏம்பா வேதியல் விஞ்ஞானிகளே இது உண்மையா ??

குக்கரை தெரியாமல் தூக்கி ஏறிய வேண்டும் போல !!!!
சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்கவேண்டும். சூரிய ஒளி,
காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம். இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும்.
ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதை தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று
சொல்லுகிறோம்.

இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.
உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை.  இது முழுவதுமாக விஷமானது. இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில்.

இது மிகவும் ஆபத்தானது. இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர் களால் சிறைச்சாலையில்
உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு
கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷக் குக்கரில் சமைக்கும் பதார்த்தம்
நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால்
எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.
அதனால் தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும்.

மிருதுவானால் போதாது. போஜனம் சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.

மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13%  தான் இருக்கும்.

இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.இதைப் போன்றே ரிஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ
வேவ் போன்ற காற்று, ஒளி படாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம்
உறுதி செய்யப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment