Monday, April 11, 2016

சென்னை - கடலூர் பெருவெள்ள நிவாரண நலப்பணிகள்!


கடந்த 2015   நவம்பர் மாதம் தொடங்கி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன.

சென்னை வெள்ளத்தில் மிதக்கும்பொழுது கைகொடுத்த கைகள் இளைஞர்களுடையதே... வெள்ளம் உச்சத்தில் இருந்தபொழுதும் உணவு சமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கல், அருகில் ஆபத்தில் உள்ளோரை காப்பாற்றல் என தம்மால் இயன்ற அளவு  நமது சென்னை நண்பர்கள் உதவ ஆரம்பித்தனர்.
நமது  நண்பர்கள் தத்தமது பகுதிகளில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களின் கையில் பொருள் சேருமாறு வாகனங்களில் ஏற்றிச் சென்று விநியோகம் செயதனர்.

வெள்ளம் வடியத் தொடங்கும் வரை உணவுப்பொருட்கள், பாய்கள், விரிப்புகள், அத்தியாவசியப் பொருட்கள் எனக் கடலூரின் உதவிகள் எட்டாத உட்பகுதி கிராமங்களுக்கு நண்பர்கள் பல வாகனங்களில் பொருட்களைக் கொண்டு சென்று தமது கைப்பட பிரித்துக் கொடுத்தனர்.


அதற்குண்டான வாகனச் செலவுக்காக MCE89 சார்பில் பணம் திரட்ட ஆரம்பித்தோம். அதே சமயம் ஆ.தியாகராஜன்  நண்பர் ஸ்ரீராம் ஹரிஹரன் நம்முடன் கைகோர்த்தார்.

மக்களின் இளகிய மனதால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பணம் சேர்ந்தது.

இதுவரையிலான் மொத்த வசூல்                                  : 2,11,816.00
நிவாரணப் பொருட்கள் சேர்க்க லாரி வாடகை          :    27,000.00
பெட்சீட்டுகள் வாங்கியது                                             :    18,000.00
                                                                                      --------------------
  கையிருப்பு                                                                     1,66,816.00
                                                                                    -----------------------



மிச்சமுள்ள கையிருப்பு தொகையில் சிறப்பான செயல் செய்ய வேண்டும் MCE89 குழு ஆலோசித்தது. அதன் விளைவாக உதித்த திட்டமே கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிப்பறைக் கட்டும் திட்டமாகும்.

இதற்காக நண்பர்கள் குழு அமைக்கப்பட்டது, இந்த நண்பர் குழு கடலூர் மாவட்ட கிராமங்களுக்கு சில முறை பயணித்து அங்கிருக்கும் நல்ல நண்பர்கள் மூலமாகவும், நிவாரணப் பணியில் ஈடுபட்ட நமது நண்பர்களின் அனுபவத்தின் மூலமும் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்வையிட்டனர், அவர்கள் மூன்று பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் தேவைகளை அறிந்தனர். கட்டுமானத் துறை வல்லுனர்கள் மூலம் மூன்று பள்ளிகளுக்குமான கழிப்பறைக்கான திட்டங்கள், பணத்தேவைகள் ஆகியவற்றைப் பெற்றனர்.

பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டன. பட்ஜெட்டும் திட்ட வரைபடங்களும்

இன்னும் சிறிது காலத்தில் இத்திட்டம் முழுமையாக ஆரம்பிக்க இருக்கிறது.


இப்பொழுதும் ஒன்றும் நேரமாகிவிடவில்லை, நீங்கள் இன்னும் இதற்கு பணம் கொடுக்கலாம். இன்னும் அதிக பள்ளிகளுக்கு நாம் வசதிகள் செய்துதரலாம்.

விருப்பமுள்ளோர் கீழ்கண்ட நமது நண்பர் தளபதி சீனிவாசன் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.


S. Thalapathy srinivasan,
ICICI BANK ACCOUNT
Mdu  tallakulam
 600 601 502 798
IFSC : ICIC0006006
 
இதுவரை கொடைகொடுத்த வள்ளல்கள்.
  1. ஸ்ரீராம் ஹரிஹரன்
  2. A. தியாகராஜன்
  3. S.R. ரமேஷ்
  4. S. தாமரை செல்வன்
  5. M. மணவாளன்
  6. A. ராமச்சந்திரன்
  7. V. முரளிபாஸ்கரன்
  8. B. ஜெயக்குமார்
  9. R. பெரியசாமி
  10. J. ரமேஷ்
  11. M, மெஹபூப் பாஷா
  12. R. அற்புதசாமி
  13. J.  கண்ணன்
  14. C. முத்துக்குமார்
  15. R, சுதர்ஷன்
  16. M. மாதவதாஸ்
  17. S. தினேஷ்குமார்



No comments:

Post a Comment